முத்துரங்க முதலியார்

இந்திய விடுதலைப் போராட்டம்

முத்துரங்க முதலியார் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியிலுள்ள நாசரேத் பேட்டையைச் சேர்ந்த இந்திய விடுதலை போராட்டக்காரர். இவர் காமராசர் போன்றோரோடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர்.[1] அதன் காரணமாக ஆகத்து 30, 1942 அன்று வி.வி.கிரி, காமராசர், சத்தியமூர்த்தி ஐயர் , சஞ்சீவ் ரெட்டி போன்றோரோடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1946ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணம் சட்டசபைக் காங்கிரசு கட்சித் தலைவர் பதவிக்கு டி.பிரகாசம் பெயரும், காமராசர் ஆதரவோடு முதலியாரின் பெயரும் முன்மொழியப்பட்டது.[3]

முத்துரங்க முதலியார்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-07-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துரங்க_முதலியார்&oldid=3878691" இலிருந்து மீள்விக்கப்பட்டது