முற்பகல் என்பது பகற்பொழுதில் 8 மணி முதல் நண்பகல் 12 மணிக்கு முன்பு வரை உள்ள இடைப்பட்ட காலப்பொழுதாகும்.[1] திருவள்ளுவர் அருளிய திருக்குறளில்,

பிறர்க்கின்னா முற்பகல் செயிற் றமக்கின்னா

பிற்பகல் தாமே விளையும்

என்று முற்பகலில் ஒருவர் பிறருக்குத் தீங்கு விளைவித்தால், பிற்பகலில் அதன் விளைவாக அவருக்குத் தீங்கு ஏற்படும் என்று குறிப்பிடுகிறார். [2]

முற்பகல் செய்தான் பிறன் கேடு தன்கேடு பிற்பகல்

என்று இளங்கோ அடிகளால் அருளப்பட்ட சிலப்பதிகாரம், அதே கருத்தை முற்பகல் வார்த்தையுடன் தெளிவுபடுத்துகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Guha, ராமச்சந்திர குஹா / Ramachandra (2009-08-01). இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு பாகம் - 1 / Indhiya Varalaaru - Gandhikku Piragu Part 1 (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8493-212-6.
  2. Tiruvaḷḷuvar (1963). Tirukkur̲aḷ: ārāyccip patippu. Śrīrāmakiruṣṇa Miṣan̲ Vityālayaṃ.
  3. Caṇmukacuntaram, Cuṭalaimuttu (1980). Nāṭṭuppur̲a ilakkiya varalār̲u. Maṇivācakar Nūlakam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்பகல்&oldid=3625934" இலிருந்து மீள்விக்கப்பட்டது