மோதிலால் சிமன்லால் செதால்வத்

இந்திய வழக்குரைஞர், அரசியல்வாதி

மோதிலால் சிமன்லால் செதால்வத் (Motilal Chimanlal Setalvad; 1884 - 1974) ஒரு சிறந்த இந்தியச் சட்ட அறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆனார் (1950-1963) இருந்தார்.[1] இந்தியாவின் முதல் சட்ட ஆணையத்தின் (1955-1958) தலைவராகவும் இருந்தார். இது இந்திய அரசால் நாட்டில் சட்ட சீர்திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 1961-ஆம் ஆண்டு இந்திய வழக்குரைஞர் கழகத்தின் முதல் தலைவரானார் [2] .

மோ. சி. செதால்வத்
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
28 சனவரி 1950 – 1 மார்ச்சு 1963
இந்தியச் சட்ட ஆணையத்தின் முதல் தலைவர்
பதவியில்
1955–1958
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மோதிலால் சிம்னாலால் செதால்வத்
தேசியம்இந்தியர்
பெற்றோர்சிமன்லால் அரிலால் செதால்வாத் (ஜலியான்வாலா பாக் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹன்டர் குழுவின் உறுப்பினர்
உறவினர்கள்தீசுதா செதால்வத் (பேத்தி)
வேலைவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் சட்டத்துறைத் தலைவர்.

1957 ஆம் ஆண்டு இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் இவருக்கு வழங்கப்பட்டது. [3]

சுயசரிதை தொகு

பிரபல வழக்கறிஞர் சர் சிமன்லால் அரிலால் செதால்வத்தின் மகனான இவர் மும்பையில் வளர்ந்தார். மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தார். மும்பையில் சட்டப் பயிற்சியைத் தொடங்கி, இறுதியில் ஜவகர்லால் நேருவின் கீழ் இந்திய அரசாங்கத்தின் ஆரம்ப ஆண்டுகளில் 1950 இல் மும்பையின் அரசு தலைமை வழக்குரைஞராகவும், இந்தியாவின் சட்டத்துறையின் தலைவராகவும் ஆனார்.

முக்கியமான மற்றும் சில சமயங்களில் சர்ச்சைக்குரிய வழக்குகளில் அரசாங்கத்திற்காக வாதாடினார். ஐக்கிய நாடுகள் அவையின் காஷ்மீர் தொடர்பான இந்தியா-பாக்கித்தான் எல்லையை வரையறுக்கும் இராட்கிளிஃப் தீர்ப்பாயத்திலும் இவர் பங்கெடுத்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட ஆணையத்திற்கு தலைமை தாங்கினார். அதில் முக்கியமான சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல், ஆணையங்களின் எதிர்கால செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பையும் உருவாக்கினார். [4]

இறப்பு தொகு

இவர் 1974 இல் இறந்தார். [5]

உசாத்துணை தொகு

சான்றுகள் தொகு

  1. "Rule of law versus rule of judges". தி இந்து. Oct 26, 2006 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 27, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071127104225/http://www.hindu.com/2006/10/26/stories/2006102603841000.htm. 
  2. First Law Commission: Chairman Mr. M. C. Setalvad 1955-1958 Law Commission of India.
  3. "Padma Awards". Ministry of Communications and Information Technology.
  4. "M.C. Setalvad". Bar Council of India. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.
  5. memorial

வெளி இணைப்புகள் தொகு