ரேகா தோஷித்

ரேகா மன்ஹர்லால் தோஷித் (Rekha Doshit) என்பவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.

இளமை & கல்வி தொகு

தோஷித் 1952ஆம் ஆண்டு திசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் குசராத்தின் ராஜ்கோட்டில் பிறந்தார்.[1] அகமதாபாத்தில் உள்ள சர் எல். ஏ. ஷா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினையும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தினையும் பெற்றார்.

பணி தொகு

தோஷித் 1977-ல் வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1995-ல் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 21 சூன் 2010 அன்று, தோஷித் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[1] இதன் மூலம் பாட்னா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆனார் தோஷித்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Hon'ble The Chief Justice Miss Rekha Manharlal Doshit". Patna High Court. Archived from the original on 4 March 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_தோஷித்&oldid=3410709" இலிருந்து மீள்விக்கப்பட்டது