வலைவாசல்:வரலாறு


[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


வரலாறு



வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் வகையில்லாமல் போயிருக்கும். இந்த செப்பேடுகளில் பாண்டியர் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள் என்றும் அகத்தியரை குல குருவாக கொண்டனர் எனவும் இந்துக் கடவுளான இந்திரனை பலமுறை தோற்கடித்தனர் என்றும் ஆழ்கடலே வற்றும் அளவில் வேல் எறிந்தனர் என்றும் தொன்மக்கதைகள் கூறப்பட்டுள்ளன.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|வரலாறு}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


விக்கித்திட்டங்கள்



தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்
துனைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்



சிறப்புப் படம்



எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு
எசுப்பானியப் பெரும் கடற்படையெடுப்பு



கிபி 1588ஆம் ஆண்டு எசுப்பானியப் பேரரசு இங்கிலாந்தின் மீது கடல் வழியாகப் படையெடுத்தது. எசுப்பானிய அரசர் இரண்டாம் ஃபிலிப்பு, இங்கிலாந்தைக் கைப்பற்றி, அதன் அரசி முதலாம் எலிசபெத்தை அரசணையிலிருந்து இறக்க இந்த படையெடுப்பை மேற்கொண்டார். இங்கிலாந்து கடற்படையை ஆங்கிலக் கால்வாயில் முறியடித்து, பின்னர் தரைப்படைகளை இங்கிலாந்து மண்ணில் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் எஃபிங்காம் பிரபு மற்றும் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் தலைமையிலான இங்கிலாந்து கடற்படை எசுப்பானியக் கடற்படையைத் தோற்கடித்து விரட்டியதால், ஃபிலிப்பின் திட்டம் தகர்க்கப்பட்டது. படத்திலுள்ள ஓவியம் பிலிப்-ஜாக் டி லூதர்பர்க் எனும் ஓவியரால் தீட்டப்பட்டது. எசுப்பானியக் கடற்படையின் தோல்வியினைக் காட்டுகிறது.
படிம உதவி:
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  


செய்திகள்




தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{{fullurl:{{{2}}}|action=edit}} தொகு]  

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வரலாறு&oldid=3433679" இலிருந்து மீள்விக்கப்பட்டது