வளன் அரசு

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

வளன் அரசு (பிறப்பு: மே 15, 1940) திருநெல்வேலி - பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் தமிழ் எழுத்தாளருமாவார். இவர் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

ஆசிரியப் பணி தொகு

  • திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் (1960-61)
  • பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் (1963-67)
  • பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் த‌மிழ்ப்பேராசிரிய‌ர் (1967-97)
  • பாளையங்கோட்டை ச‌த‌க்க‌த்துல்லா அப்பா கல்லூரியில் த‌மிழ்ப்பேராசிரிய‌ர் (2001-10)

குடும்பம் தொகு

  • மனைவி: ம.செயராணி, தமிழ்க்கலை முதுவர்
  • மக்கள்  : எழுவர் - ஆண்கள் நால்வர், பெண்கள் மூவர்.

எழுதிய‌ நூல்க‌ள் தொகு

  • கட்டுரைக் களஞ்சியம்(1972)
  • நாடும் ஏடும் (1974)
  • வீரமாமுனிவர் ஒரு விளக்கம் (1980)
  • பாரதியின் புலமை நலம் (1982)
  • துறைதோறும் திரு.வி.க. (1983)
  • தேம்பாவணித் திறன் (1988)
  • விவிலியக் கருத்தரங்கம் (1993)
  • தமிழ் நெஞ்சங்கள் (1994)
  • தமிழகப் புலவர்குழு அணியும் பணியும் (1995)
  • வாழ்க்கை விடியல் திருக்குறள் (2000)
  • வழிகாட்டும் வள்ளுவம் (2003)
  • திருக்குறள் விளக்கம் (2005)
  • திருக்குறள் ஆய்வுக் களஞ்சியம்(2005)
  • பன்முகத் தமிழ் (2006)
  • வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள் (2006)
  • கிறித்தவத் தமிழ்ச் சான்றோர் (2009)

பெற்ற விருதுகள் தொகு

  • தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (2011)
  • அருண்மொழிச்செல்வர் - தமிழ்நாட்டு நல்வழி நிலையம்,சென்னை (1974)
  • திருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு (1985)
  • தமிழ்மாமணி - உலகத் தமிழ்க் கிறித்தவப் பேரவை, சென்னை (1986)
  • திருக்குறள் சான்றோர் - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், மதுரை (2001)
  • மூத்த தமிழ் அறிஞர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (2010)

போன்ற நாற்பத்தைந்திற்கும் அதிகமான விருதுகள்

சாத‌னைக‌ள் தொகு

  • புலவர்கள் இருநூற்று ஐம்பதின்மரை உருவாக்கியவர்
  • இளமுனைவர் இருபதின்மரை வழிநடத்தியவர்
  • முனைவர் பட்டப்பேற்றுக்குப் பதின்மரின் நெறியாளர்
  • பதினாறு நூல்களின் ஆசிரியர்
  • நாற்ப‌து ஆண்டுக‌ளாக‌த் திருநெல்வேலித் த‌னித்த‌மிழ் இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் சார்பில் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்குப் பேச்சுப்போட்டி, க‌ட்டுரைப்போட்டி ஆகிய‌ன‌ ந‌ட‌த்தி வ‌ருபவர்.
  • பாளைய‌ங்கோட்டை மாநில‌த்த‌மிழ்ச்ச‌ங்க‌த்தின் இணைச்செய‌லாளராக‌க் க‌ட‌ந்த‌ ப‌த்து ஆண்டுக‌ளில் ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ இல‌க்கிய‌க்கூட்ட‌ங்க‌ள்
  • உல‌க‌த்திருக்குற‌ள் மைய‌த்தின் தென்ம‌ண்டில‌ப் பொறுப்பாள‌ராக‌ப் ப‌ணியாற்றி ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மாண‌வ‌ர்க‌ளைத் "திருக்குற‌ள் செல்வ‌ர்" ப‌ட்ட‌ம் பெற‌ வைத்த‌வ‌ர்.
  • திருநெல்வேலியில் த‌மிழ் வ‌ள‌ர்ச்சி‍ ப‌ண்பாட்டு மைய‌ம் உருவாக‌ அய‌ராது பாடுப‌ட்ட‌வ‌ர்க‌ளுள் முத‌ன்மையான‌வ‌ர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளன்_அரசு&oldid=2641213" இலிருந்து மீள்விக்கப்பட்டது