வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் (நூல்)

கவிஞர் இக்பாலின் கவிதைத் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளியான இத் தொகுப்பில் 45 கவிதைகள் உள்ளன. முதல் கவிதையான "வானவர்கள் மண்ணில் இருக்கின்றார்கள்" என்னும் கவிதைத் தலைப்பையே தொகுப்புக்கும் பெயராக இட்டுள்ளார்கள். இரண்டாவது கவிதை அன்பு மிளிரும் தாத்தா குழந்தை. இத்தொகுப்பில் எடிசன் மடல் என்று புகழ்பெற்ற எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தது பற்றி சுவையான ஒரு கவிதை உள்ளது. இதில் இறைவனைப் பார்த்து

  • எவரும்
    என் விளக்குகளை அணைக்கலாம்;
    என்னை அணைக்க முடியாது
    ஏனெனில்
    நான்
    நீ ஏற்றிய விளக்கு
வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்
நூல் பெயர்:வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்
ஆசிரியர்(கள்):க. து. மு. இக்பால்
வகை:கவிதைத் தொகுப்பு
துறை:கவிதைகள்
காலம்:2005
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:136
பதிப்பகர்:பாரதி அச்சகம், சென்னை 600 041
பதிப்பு:2005
ஆக்க அனுமதி:ஆசிரியர்

என்று முடிக்கும் வரிகள் அருமையானது.