வாள்வைத்தான்கோட்டம்

வாள்வைத்தான்கோட்டம் (Valvaithankoshtam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வாள்வைத்தான்கோட்டம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 16,965 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பேரூராட்சியின் அமைப்பு தொகு

இப்பேரூராட்சி பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,406 வீடுகளும், 16,965 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

வரலாறு தொகு

பரசுராமரால் உருவானது கேரளம் என புராணங்கள் கூறுகின்றன.பரசுராமர் தனது தந்தை சமதக்கினி முனிவரின் ஆணைக்கிணங்க தமது தாயாரின் தலையைக் கொய்தார்.அந்த பாவம் தீர இமயத்தில் தவமியற்ற அறிவுறுத்தப்பட்டடார்.அந்நிலையில் அவர் தனது வாளை இந்த இடத்தில் வைத்துவிட்டுச் சென்றதால் இவ்விடம் வாள்வைத்தக் கோட்டம் எனப்படுகிறது.இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்துள்ள தேவியின் கையிலுள்ள வாள் பரசுராமருடையது என நம்பப்படுகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. [ பேரூராட்சியின் இணையதளம்]
  4. Valvaithankoshtam Population Census 2011
  5. VALVAITHANKOSHTAM
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்வைத்தான்கோட்டம்&oldid=2680684" இலிருந்து மீள்விக்கப்பட்டது