விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 20, 2015

கடல் கொள்ளை சில ஆயிரம் ஆண்டுகளாக உலகில் நடந்துவரும் குற்றம். கடல் கொள்ளையின் பொற்காலமெனக் கருதப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கரிபியக் கடலில் கடல் கொள்ளையர் நடவடிக்கைகள் அதிகமாகின. அவர்களுள் புகழ்பெற்றவர் “கருந்தாடி” எட்வர்ட் டீச். கடற்கொள்ளையன் கருந்தாடி பிடிபடல், 1718 என்னும் இந்த ஓவியம் கருந்தாடிக்கும் கடற்படை அதிகாரி இராபர்ட் மேய்னார்டிற்கும் இடையில் ஓக்ரகோக் வளைகுடாவில் நடந்த சண்டையைச் சித்தரிக்கிறது. சண்டையின் விளைவாக கருந்தாடி பிடிபட்டு பின் தூக்கிலிடப்பட்டார்.

படம்: ழான் லியோன் செர்ரோம் ஃபெர்ரிசு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்