விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 06, 2011

  • நமக்கு கிடைத்துள்ள தமிழில் எழுதப்பட்ட முதல் நாட்குறிப்பு ஆனந்த ரங்கம் பிள்ளையினுடையது (படம்). அதுவும் அவர் இறந்து 55 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது.
  • மதுரைத் திட்டம் மற்றும் நூலகத் திட்டம் ஆகியவை தமிழ் நூல்களை எண்ணிமப்படுத்தி இணையத்தில் அளிக்கும் இரு திட்டங்கள்.
  • நாம் காணும் மிகப் பிரகாசமான விண்மீனான சூரியனின் வாழ்நாளில் பாதி முடிந்து விட்டது.
  • தீபகற்ப இந்திய ஆறுகள் பெரும்பாலும் மேற்கிலிருந்து கிழக்காகவே ஓடுகின்றன. ஆனால் நர்மதை, தபதி, மாகி ஆகிய மூன்று ஆறுகளோ கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.
  • இலங்கைச் சிங்கம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த சிங்கங்களின் துணையினமாகும். கிமு 37,000 ஆம் ஆண்டுவாக்கில் முற்றாக அழிந்து விட்டதாகத் தெரிகிறது.