விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்பிரல் 26, 2014

யுவான் அரசமரபு குப்லாய் கானால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் மங்கோலியாவின் போர்சிசிங் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தென் சீனாவை ஆட்சி புரிந்த சாங் அரசமரபு மன்னர்களை வெற்றி கொண்டவர். குப்லாய் கானுக்கு முன்னரும் மங்கோலியர்கள் சீனாவின் (தற்கால வடக்குச் சீனா) பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளார்கள். ஆனால் 1271 இல் குப்லாய் கான் யுவான் அரசமரபைப் தோற்றுவிக்கும் வரை சீன மரபுப்படி புதிய அரசமரபு எதையும் உருவாக்கவில்லை. 1271லிருந்து 1368 வரை இவர் தோற்றுவித்த யுவான் மரபு அரசர்கள் ஆட்சி புரிந்தனர். இதுவே சீனாவில் வெளிநாட்டவர் உருவாக்கிய முதல் அரசமரபாகும். இவர்கள் தற்காலத்திய சீனாவின் பெரும்பகுதிகளையும் தற்கால மங்கோலியாவையும் ஆட்சி புரிந்தார்கள். மேலும்...


மணியம்மையார் (1920-1978) என அறியப்பட்ட அரசியல்மணி, திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் ஈ. வெ. இரா.வின் இரண்டாவது மனைவி ஆவார். பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தவர். சொற்பொழிவாளர்; எழுத்தாளர், நிர்வாகி. திராவிடர் கழகத்தின் பல்வேறு களப்போராட்டங்களைத் தலைமையேற்று பல தடவைகள் சிறைக்கும் சென்றுள்ளார். 1949 இல் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார். 1974 இல் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. 1974 டிசம்பரில் நடந்த இராவணம் லீலை நிகழ்வுக்கு தலைமை வகித்தார். 1977 இல் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார். மேலும்...