விக்ரகபாலன் (சகமான வம்சம்)

நாதுல்லாவின் மன்னன்

விக்ரக-பாலன் ( Vigrahapala ) (ஆட்சி சுமார் 990-994 பொ.ச.) நாதுல்லாவின் சகமனா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் நாதுல்லாவை (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாதோல்) சுற்றியுள்ள பகுதியை ஆட்சி செய்தார்.

விக்ரகபாலன்
நாதுல்லாவின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 990–994 பொ.ச.
முன்னையவர்பாலிராஜா
பின்னையவர்மகிந்து
அரசமரபுநாதுல்லாவின் சகமனாக்கள்
தந்தைஇலட்சுமணன்

ஆட்சி தொகு

விக்ரகபாலன் சகமான மன்னன் இலட்சுமணனின் மகனாவார். இவரது சகோதரர் சோபிதாவும் அவரது மருமகன் பாலிராஜா ஆகியோர் இலட்சுமணனுக்குப் பிறகு பதவியேற்றனர். பாலிராஜா வாரிசு இல்லாமல் இறந்திருக்கலாம். இதன் காரணமாக விக்ரகபாலன் புதிய மன்னரானார். [1]

விக்ரகபாலனின் குறுகிய ஆட்சிக்காலம் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவுமின்றி கடந்துவிட்டது. [1] சுந்தா மலைக் கல்வெட்டு சகமான அரசர்களின் பட்டியலில் இவரது பெயரைத் தவிர்க்கிறது. இருப்பினும், சகஜபாலனின் மண்டோர் கல்வெட்டு, கீர்த்திபாலனின் நாதோல் கல்வெட்டு மற்றும் அல்கனதேவனின் நாதோல் கல்வெட்டு உள்ளிட்ட பிற கல்வெட்டுகளால் இவர் ஆட்சியாளராக சான்றளிக்கப்பட்டார். [2]

இவருக்குப் பின் இவரது மகன் மகிந்து ஆட்சிக்கு வந்தார் . [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 R. B. Singh 1964, ப. 239.
  2. Dasharatha Sharma 1959, ப. 122.

உசாத்துணை தொகு

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.