விலங்குப் பண்ணையின் பண்கள்

விலங்குப் பண்ணையின் பண்கள் (Anthems of Animal Farm) சார்ச்சு ஆர்வெலின் நூலான விலங்குப் பண்ணையில் இடம்பெற்ற பண்கள் ஆகும். இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பண் இவற்றுள் முக்கியமானது ஆகும். இப்பாடலானது பின்னர் நெப்போலியனால் இன்னொரு பாடல் மூலம் நீக்கப்பட்டது.

இங்கிலாந்தின் விலங்குகளே என்ற பாடலானது ஆரம்பத்தில் பன்றிப் பெரியவரால் விலங்குகளுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் பாடலாகும். பின்னர், நெப்போலியன் அப்பாடலைப் பாடுவதற்குத் தடை விதிப்பதுடன், புதிய பாடலை அறிமுகப்படுத்துகிறது.

மேற்கோள்கள் தொகு