வில்லுக்குறி

வில்லுக்குறி (Villukuri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு மேம்பால பாசனவாய்கால் உள்ளது. இதனருகில் மாம்பழத்துறை ஆறு, அணைக்கட்டு மற்றும் மேம்பால பாசனவாய்க்கல் உள்ளது.

வில்லுக்குறி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

15,304 (2011)

1,543/km2 (3,996/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.92 சதுர கிலோமீட்டர்கள் (3.83 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/villukuri


வில்லுக்குறி மேம்பால பாசனவாய்க்கால்

அமைவிடம் தொகு

கன்னியாகுமரியிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள வில்லுக்குறி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் இரணியலில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள் தொகு

வில்லுக்குறி பேரூராட்சிக்கு கிழக்கே நாகர்கோவில் 12 கிமீ; மேற்கே தக்கலை 6 கிமீ; தெற்கே திங்கள்நகர்]] 8 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

9.92 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4037 வீடுகளும், 15304 மக்கள்தொகையும் கொண்டது. [4][5] [6]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. வில்லுக்குறி பேரூராட்சியின் இணையதளம்
  4. வில்லுக்குறி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Villukuri Population Census 2011
  6. [ https://indikosh.com/city/702606/villukuri Villukuri Town Panchayat]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லுக்குறி&oldid=3736404" இலிருந்து மீள்விக்கப்பட்டது