வேதவதி விஷ்ணுவை மணப்பதற்கு கடும் தவம் புரிந்து கொண்டு இருந்த நிலையில் ராவணன் அவளைக் கண்டான். அவன் தன்னுடடைய ஆசையை தெரிவித்தும் அவள் அதற்கு இணங்காமல் விஷ்ணுவை மணப்பதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். அதனால் கோபம் அடைந்த ராவணன் அவளின் கூந்தலை பிடித்து இழுத்தான். அவள் தன்னுடைய அழகிய கூந்தலை தன்னுடைய கையினாலே அறுத்து எறிந்து, அங்கேயே தீ மூட்டி விட்டு, ராவணனை பார்த்து: “உன்னால் தீண்டப்பட்ட நான் இனி உயிர் வாழப் போவதில்லை, உன்னுடைய அழிவிற்காக நான் மீண்டும் பிறப்பேன்” என்று கூறி தீயிலே விழுந்து உயிரை விட்டாள். பின்னர் சனக மன்னர் குழந்தை வரம் வேண்டி யாக சாலை உழுது கொண்டிருந்த சமயத்தில் அந்த நிலத்தில் தோன்றிய வேதவதியே சனக மன்னரின் வளர்ப்பு மகளாகிய சீதை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Vedavati
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதவதி&oldid=2601167" இலிருந்து மீள்விக்கப்பட்டது