வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (V. S. Boys Higher Secondary School) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூரில் உள்ளது.[1] நூற்றாண்டு கண்ட இக்கல்வி நிறுவனம் தற்போது ஸ்ரீ ஜி.ஆர்.எம் கல்வி முகவாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் மதிப்புமிக்க பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயில்கின்றனர்.
வரலாறு தொகு
வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1916ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இதன் அக்காலப் பெயர் கழகப் பள்ளி என்பதாகும். அக்காலத்தில் Board High School என ஆங்கிலத்தில் என்று அழைக்கப்பட்டது.
சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள தொகு
அரசியலில் தொகு
- மு. கருணாநிதி[2] முன்னாள் தமிழக முதலமைச்சர்
- க. அன்பழகன் முன்னாள் தமிழக நிதியமைச்சர்
- முரசொலி மாறன் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
- ஹாஜாகனி, தமுமுக, தமிழக அரசியல்வாதி, பேராசிரியர்
இதழியலில் தொகு
- சின்னக்குத்தூசி , திராவிட இயக்க பத்திரிக்கையாளர்
- கோவி லெனின், இதழியலாளர், நக்கீரன் குழுமம்