ஸாஹ்பாஷ்பூர்

ஸாஹ்பாஷ்பூர் (शाहबाजपुर Shahbazpur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அராரியா மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம்.[1] இது இந்திய நோபாள எல்லையில் அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

இது அராரியா நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர்கள் தொலைவிலும், இந்திய நேபாள எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமம் தேசிய நெடுஞ்சாலை NH-54 உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கோஸி ஆற்றின் துணை ஆறான பார்மன் ஆறு இக்கிராமத்தின் அருகே செல்கின்றது.

மக்கள் தொகு

இங்கு வசிப்போரில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் மைதிலி பிராமணர்கள் ஆவர். இவர்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். இவர்களின் கல்வியறிவு 90% ஆகும். இந்தக்கிராமத்தின் மொத்த மக்கட்தொகை 7,000 ஆகும். என இவ்வூர் மக்களால் . சதி மாதாவின் (Mata Sati) எரிந்த உடல்பகுதி இங்கு விழுந்ததாக இவ்வூர் மக்களால் நம்பப்படும் இக்கிராமம் ஒரு முக்கிய சக்தி பீடம் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பெரிய கோவில் ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சான்றுகள் தொகு

  1. ""National Habitation Survey 2010 "". Archived from the original on 2014-09-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸாஹ்பாஷ்பூர்&oldid=3792630" இலிருந்து மீள்விக்கப்பட்டது