ஹம்சானந்தி

ஹம்சானந்தி 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
ஹம்சானந்தி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி1322 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3223 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ப என்னும் ஸ்வரம் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு ஷாடவ இராகம்.
  • இது ஒரு உபாங்க இராகம்.

இதர அம்சங்கள் தொகு

  • இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
  • பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
  • கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் மாலை நேரத்தில் பாடுவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
  • இந்துஸ்தானி இசையில் இந்த இராகம் பூர்யசோகினி என்று அழைக்கப்படுகின்றது.

உருப்படிகள் தொகு

  1. கிருதி : "நானே உன்னை" - ஆதி - மாயூரம் வேதநாயகம்பிள்ளை.
  2. கிருதி : "மாதவமாய" - ஆதி - பாபநாசம் சிவன்.
  3. கிருதி : "சொல்லித்தான் தெரியுமா" - ஆதி - அம்புஜம் கிருஷ்ணா.
  4. கிருதி : "பன்னிருகை வேலனே" - ரூபகம் - தண்டபாணி தேசிகர்.
  5. திருப்புகழ் : "நிறைமதி" - ஆதி - அருணகிரிநாதர்.

ஹம்சானந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் தொகு

  1. மான்கண்டேன் மான்கண்டேன்... :- ராஜரிஷி
  2. மின்சாரப்பூவே மின்சாரப்பூவே... :- படையப்பா
  3. ராத்திரியில் பூத்திருக்கும்... :- தங்கமகன்
  4. பொட்டு வைத்து பூ முடிக்கும்... :- நினைத்தேன் வந்தாய்

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சானந்தி&oldid=1320232" இலிருந்து மீள்விக்கப்பட்டது