2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 2009ல் இந்தியப் பொதுத் தேர்தலுடன் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 16 லும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23 தேதியும் நடைபெற்றது. மே 16ல் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது. எனினும் முந்தைய தொகுதிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவே. முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டியே மீண்டும் முதலமைச்சராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.