2014 அந்தமான் படகு விபத்து

2014ம் ஆண்டு சனவரி 26 இல் இந்தியா நாட்டின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார்தீவுக்கூட்டங்களின் தலைநகரான போர்ட் பிளேர் அருகில் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.[1] [2][3]

2014 அந்தமான் படகு விபத்து
ரோஸ் தீவை காட்டும் படம்
இடம்போர்ட் பிளேர் இந்தியா
நாள்26 சனவரி 2014
பயணிகளும், பணியாளர்களும்45
இறந்தோர்21+
படகின் பெயர்அக்யூ மரைன்

விபத்து தொகு

இந்தியாவின் முக்கிய கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக அந்தமான் நிகோபார் தீவுக்கு சென்றார்கள். அந்தமானில் ஒரு தீவிலிருந்து மற்ற தீவுக்கு செல்ல படகுகளையே பயன்படுத்தும் கட்டாயம் உள்ளது. ஆகையால் 25 [4] பேர் பயணம் செய்ய உதவும் அக்யூ மரைன் என்ற சிறிய வகையான தனியாரின் படகில் 41 பேர் ரோஸ்தீவிலிருந்து பக்கத்து தீவுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அப்படகு 26.ஜனவரி 2014 மாலை 4.30 மணியளவில் போர்ட் பிளேயருக்கு அருகிலேயே பாரம் தாங்காமல் கவிழ்ந்தது.[5] 17 பேர் தமிழர்கள் உட்பட மகாரஷ்டிரர்களும் சேர்த்து 32 பேர் மரணம் அடைந்தார்கள்.[6][7] பின்னர் 21 பேர் காப்பாற்றப்பட்டு அங்குள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விளைவு தொகு

இப்படகு விபத்தால் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மற்றும் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.[8]

மேலும் பார்க்க தொகு

உதவிக்கு


மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2014_அந்தமான்_படகு_விபத்து&oldid=2760261" இலிருந்து மீள்விக்கப்பட்டது