அட்டாரி
(அடாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அட்டாரி பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் இந்திய தலைநகரான புது தில்லியையும் பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] இந்திய எல்லையை தாண்டி செல்லும் சம்ஜௌதா விரைவு இரயில் அட்டாரியிலிருந்து துவங்கி 3 கி.மீ. தொலைவில் உள்ள பாகிஸ்தானின் வாகா வரை இயக்கப்படுகிறது.[2]
அட்டாரி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | அமிர்தசரஸ் |
பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 13 ஏப்ரல் 2012 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை நிலையம் அட்டாரியில் நிறுவப்பட்டது.