அம்பலவாணக் கவிராயர்

அம்பலவாணக் கவிராயர், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். இவர் அறப்பளீசுர சதகம் என்ற சைவ நூலை எழுதினார். இந்த நூல் நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும், “அனுதினமும் மனதில் நினை தருசதுர, கிரிவளர் அறப்பள்ளீச்சுர தேவனே” என முடிகின்றது. இவர் அருணாசலக் கவிராயரின் குமாரராவார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ் வளர்த்த அறிஞர்கள்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2014-08-19.
  2. கவிராயர்கள்-தினமணி, செப்டம்பர் 1, 2013
  3. கவிராயர்கள்-அம்பலவாணக் கவிராயர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலவாணக்_கவிராயர்&oldid=3541138" இலிருந்து மீள்விக்கப்பட்டது