அறம் விருது

அறம் விருது என்பது ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் ஒரு விருதாகும். திருக்குறள் காட்டும் உயர் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்பவர்களை உலகிற்கு அடையாளம் காட்டவும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்த விருது அளிக்கப்படுகிறது. 2003 அம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூபாய் ஒரு இலட்சம் பணமும் அளிக்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் பட்டியல் தொகு

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 டாக்டர். ஜி. வெங்கடசாமி 2003
2 வாசிமலை 2004
3 கௌசல்யாதேவி 2005
4 கூத்தம்பாக்கம் ஆர். இளங்கே 2006
5 பான்யன் தொண்டு நிறுவனம் 2007
6 டாக்டர் ஆர். சக்திவடிவேல் 2008
7 டாக்டர் கே. வி. திருவேங்கடம் 2012

குறிப்பு: 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறம்_விருது&oldid=1458713" இலிருந்து மீள்விக்கப்பட்டது