ஆதொண்டை
ஆதொண்டை | |
---|---|
Flowers and leaves of Capparis zeylanica | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. zeylanica
|
இருசொற் பெயரீடு | |
Capparis zeylanica L | |
வேறு பெயர்கள் | |
|
ஆதொண்டை (Capparis) என்பது முள்ளுள்ள ஒரு கொடி ஆகும். இந்தத் தாவரம் இந்திய துணைக்கண்டப்பகுதியிலும், சீனாவின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] இது புதர் போல் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளின் மேல் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையை இட்டுச்செல்லுகின்றன. இத்தாவரம் எலிகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த உதவுகின்றது.[2]
இது வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல் போடுவார்கள். இந்த தாவரத்தின் பாகங்கள் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது.
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- Medicinal properties பரணிடப்பட்டது 2013-01-04 at the வந்தவழி இயந்திரம்
- On medicinal properties