ஆனந்த் கீத்தே

இந்திய அரசியல்வாதி
(ஆனந்து கீத்தே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆனந்த் கங்காராம் கீதே (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர்[1]. சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.[2] இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்தார்.

ஆனந்து கீத்தே
ஆனந்து கீத்தே
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர்
பிரதமர்நரேந்திர மோதி
தொகுதிராய்காட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1951 (1951-06-02) (அகவை 72)
மும்பை, மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்அசுவினி கீத்தே
வாழிடம்மும்பை
As of மே, 2014
மூலம்: [1]

பதவிகள் தொகு

இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Portfolios of the Union Council of Ministers". Prime Minister’s Office (PMO), India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.
  2. 2.0 2.1 "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_கீத்தே&oldid=3543213" இலிருந்து மீள்விக்கப்பட்டது