ஆர். வி. ஜெபா ராசசேகர்

ஆர். வி. ஜெபா ராசசேகர் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் விளாகம் எனும் சிற்றூரில் பிறந்த இவர் மேலூர் அரசுக் கலைக்கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சூரிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர் பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் எழுதிய "காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு" எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் வகைப்பாட்டிலும், "வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இயற்பியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வி._ஜெபா_ராசசேகர்&oldid=2765769" இலிருந்து மீள்விக்கப்பட்டது