ஆ. கந்தையா (மார்ச் 19, 1928 - அக்டோபர் 3, 2011) ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர்.

ஆறுமுகம் கந்தையா
பிறப்புமார்ச் 19, 1928
மறவன்புலவு, யாழ்ப்பாணம்
இறப்புஅக்டோபர் 3, 2011(2011-10-03) (அகவை 83)
சிட்னி, ஆஸ்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்விPhD (லண்டன் பல்கலைக்கழகம்)

BA (சென்னை பச்சையப்பன் கல்லூரி)
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி(பலாலி)

இந்துக் கல்லூரி(யாழ்ப்பாணம்)
பணிபேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், மொழிபெயர்ப்பாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர், தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர்
பெற்றோர்சிவகாமி
ஆறுமுகம்
வாழ்க்கைத்
துணை
ஜெயலட்சுமி கந்தையா
பிள்ளைகள்சுதர்சன், தர்சினி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கந்தையா யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மறவன்புலவு என்ற ஊரில் ஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், நுணாவில் மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் (1948-49) பயின்றார். பள்ளிப் படிப்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். 1953 முதல் 1955 வரை கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

1956 இல் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் மு. வரதராசன் போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் தந்தையின் பரிசு என்னும் நூலை எழுதியிருக்கிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.

1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது.

மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியவர்.

மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய சிறப்பு ஒலிபரப்புச் சேவைக்காக கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார்.

விருதுகள் தொகு

  • 1996ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை அரசின் கலாகீர்த்தி விருதைப் பெற்றவர்.
  • சமய நூல்கள் எழுதியமையால் மதுரை ஆதீனத்தால் சிவநெறித் தொண்டன் (1965) எனும் பட்டம் பெற்றவர்.

வெளிவந்த நூல்கள் தொகு

புலம் பெயர முன்னர் எழுதியவை தொகு

  • திருக்கேதீஸ்வரம்
  • இந்து சமயம் (13 பதிப்புகள்)
  • மலரும் மணமும்
  • இலக்கிய வளம்
  • சிந்தனை வளம்
  • கற்பனை வளம்
  • உள்ளத்தனையது உயர்வு
  • தந்தையின் பரிசு
  • செவ்வேள்
  • ஞானச்சுடர்
  • ஒற்றுமையும் ஒப்புமையும்
  • தொலைக் கல்வி
  • தொலைக் கற்பித்தல்
  • சீராக்கம் வேண்டாமா?
  • Mystic Love
  • Cult and Worship of Murukan
  • Muruka Worship and the Concept of Bhakti

புலம் பெயர்ந்த பின்னர் எழுதிவை தொகு

  • Tamils in Australia - A brief Survey (1998)
  • மழலை அமுதம் (சிறுவர் பாடல் தொகுப்பு, 1995)
  • தமிழ் நூல் பட்டியல் (மாநில நூலகம்)
  • Tamil Literature - A brief survey
  • Tamils in Australia - An updated survey
  • ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்
  • Teaching Tamil in Australia
  • Tamil without a Teacher - Book I
  • Tamil without Teacher - Book II
  • Quest for Tamil Identity
  • கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்? (சிறுவர் இலக்கியம், 1999)
  • வால் நீண்டது எப்படி? (சிறுவர் இலக்கியம், 1999)
  • Mistic Love in the Thevaram
  • கங்காரு நாட்டில் கன்னித் தமிழ் (2000)
  • A Selected Glossary for Australian Tamils
  • Gleanings from Tirukkural for a Multicultural Society
  • Tirukkural, Selected couplets
  • Murukan, God of Tamils
  • மார்கழி மங்கையர் (1995)
  • இலங்கைத் தமிழ் அகதிகள் - கைந்நூல் (1998)
  • Tamil Community in Australia
  • ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில்கள்
  • கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் (2004)
  • Hindu Temples in Australia
  • பரதநாட்டிய முத்திரைகள் (1990)
  • தமிழ்நூல் பட்டியல் (1996)
  • தமிழ் இலக்கியம் - Tamil Literature (1996)
  • ஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும் (2005)

வெளி இணைப்புகள் தொகு

தளத்தில்
ஆ. கந்தையா எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கந்தையா&oldid=2707960" இலிருந்து மீள்விக்கப்பட்டது