இட்டாநகர்
அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமும் ஓர் மாநகராட்சியும் ஆகும்.
இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
இட்டாநகர் | |
— தலைநகரம் — | |
அமைவிடம் | 27°06′00″N 93°37′12″E / 27.10000°N 93.62000°Eஆள்கூறுகள்: 27°06′00″N 93°37′12″E / 27.10000°N 93.62000°E |
நாடு | ![]() |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | பாப்பும் பரே |
ஆளுநர் | B. D. Mishra |
முதலமைச்சர் | பெமா காண்டு |
மக்களவைத் தொகுதி | இட்டாநகர் |
மக்கள் தொகை | 59,490 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 320 மீட்டர்கள் (1,050 ft) |
15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்தொகு
- India Travel வலைவாசலில் இட்டாநகர் பரணிடப்பட்டது 2013-01-22 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)