இயைபு வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

இயைபு வண்ணம் என்பது செய்யுளில் இடையின எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

வால்வெள் ளருவி வரைமிசை இழியவும்
கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும்
வாளுகிர் உளுயம் வரையகம் இசைப்பவும்
வேலொளி விளக்கினர் வரினே
யாரே தோழி வாழ்கிற் போரே. [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயைபு_வண்ணம்&oldid=1114570" இலிருந்து மீள்விக்கப்பட்டது