இரத்தினபுரி தேசிய நூதனசாலை
இரத்தினபுரி தேசிய நூதனசாலை அல்லது இரத்தினபுரி தேசிய அருங்காட்சியகம் இலங்கையின் இரத்தினபுரி கொழும்பு வீதியில் எஹலேபொல வளவு எனும் இடத்தில் அமைந்துள்ளது.1988 மே 13 ஆந் திகதி நிறுவப்பட்ட இந்தநூதனசாலை எஹலேபொல வளவு எனும் புகழ் பெற்ற கட்டிடத்தில் இலங்கை அரசின் நூதனசாலைகள் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது . தொல்லியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
![]() | |
நிறுவப்பட்டது | மார்ச்சு 13, 1988 |
---|---|
அமைவிடம் | இரத்தினபுரி, இலங்கை |
இயக்குனர் | திருமதி தாமர தமயந்தி ஜயசேகர |
வலைத்தளம் | www.museum.gov.lk |
இந்த அருங்காட்சியகத்தில் பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்,போன்றவற்றுக்கான சிறப்பு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் இலங்கையின் சபரகமுவா மாகாணத்தைச் சார்ந்த வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களையும் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.museum.gov.lk/web/index.php?option=com_regionalm&task=regionalmuseum&id=7&Itemid=80&lang=ta
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141231175122/http://www.srisalike.com/Museum/Rathnapura/National%20Museum%20of%20Ratnapura.aspx.