இராணுவப் போர் கல்லூரி, இந்தூர்

இராணுவப் போர் கல்லூரி (Army War College, (A.W.C. Mhow) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் மாவட்டத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கார் நகரத்தில் 1 ஏப்ரல் 1971 முதல் இயங்குகிறது. இக்கல்லூரியில் இந்திய இராண்வத்தின் தரைப்படை அதிகாரிகளுக்கு போர்க் கலையில் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் இராணுவத்திற்கான தந்திரோபாயங்கள் மற்றும் தளவாடங்களுக்கான கருத்துகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்கி மதிப்பீடு செய்கிறது. இக்கல்லூரி ஆண்டுதோறும் 1,200 இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும், துணைநிலை இராணுவ அதிகாரிகளுக்கும் சிறப்பு போர்ப் பயிற்சி வழங்குகிறது.

இராணுவப் போர் கல்லூரி
குறிக்கோளுரைयुध्दाय कृत निश्चयः (சமஸ்கிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
தீர்க்கமான முடிவுடன் போர்க்களத்தில் புகுக
வகைபோர்ப் பயிற்சி கல்லூரி
உருவாக்கம்1 ஏப்ரல் 1971[1]
கட்டளை அதிகாரிலெப்டிணன்ட் ஜெனரல் வி. எஸ். சீனிவாசஸ்
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,300
அமைவிடம், ,
வளாகம்533.5 ஏக்கர்கள் (2.159 km2)
சேர்ப்புதேவி அகில்யா பல்கலைக்கழகம், இந்தூர்
இணையதளம்இணையதளப் பக்கம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Recruitment and Training". Ministry of Defence, Government of India. Archived from the original on 20 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.

வெளி இணைப்புகள் தொகு