இரா. சத்திக்கண்ணன்

எழுத்தாளர்

இரா. சத்திக்கண்ணன் (பிறப்பு: சூன் 1,1969), தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் 'பத்தை' எனும் கிராமத்தில் பிறந்த இவர் திருநெல்வேலி நீலகண்டா ஆரம்பப் பள்ளியிலும், சென்னை திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளியிலும் படித்துப் பின்பு சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.ஸி பட்டப் படிப்பை முடித்துள்ளார். சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மின்னியல் துறையில் பி.டீச் பட்டத்தைப் பெற்று பின்பு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இலக்கியப் பணி தொகு

சிறுகதை, புதுக்கவிதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபட்டுவரும் இவரின் முதல் படைப்பு ‘காலம் பொறந்திருச்சு’ எனும் தலைப்பில் ஞானோதய நாடக சபா புத்தகத்தில் வெளியானது. தோடர்ந்தும் எழுதிவரும் இவரது ஆக்கங்கள் தமிழ் முரசு, புண்ணியா, திசை ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

  • கல்லூரி காலத்தில் இவரது படைப்புகளுக்கான பரிசு

வகித்த பதவிகள் தொகு

கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர் மன்றச் செயலாளராகப் (1987-1988) பதவி வகித்துள்ளார்.

உசாத்துணை தொகு

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சத்திக்கண்ணன்&oldid=2713066" இலிருந்து மீள்விக்கப்பட்டது