உப்பாற்றுப் பாலம்
உப்பாற்றுப் பாலம் என்பது, கிழக்கு இலங்கையில் உப்பாற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ள ஒரு சாலைப் பாலம். இப்பாலம் 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[1] இது 315 மீட்டர் (1,033 அடி) நீளம் கொண்டது. இப்பாலம் 995 மில்லியன் இலங்கை ரூபா (US$9 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டது.[2] இதற்கான நிதி பிரெஞ்சு வளர்ச்சி முகமையின் திருகோணமலை ஒருங்கமைந்த உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழும், இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு வசந்தம் என்ற திட்டத்தின் கீழும் வழங்கப்பட்டது.[1][3][4] உப்பாற்றுப் பாலம், ஏ-15 மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும்.[2] முன்னர் உப்பாற்றுக்குக் குறுக்கே பயணிகளையும் வண்டிகளையும் கொண்டு செல்வதற்குப் பயன்பட்ட படகுச் சேவைக்குப் பதிலாக இப்பாலம் பயன்படுகின்றது.[1][2][5]
உப்பாற்றுப் பாலம் | |
---|---|
போக்குவரத்து | ஏ-15 நெடுஞ்சாலையில் மோட்டார் வண்டிகள் |
தாண்டுவது | உப்பாறு |
இடம் | உப்பாறு, திருகோணமலை மாவட்டம் |
மொத்த நீளம் | 315 m (1,033 அடி) |
அமைவு | 8°28′11.50″N 81°12′10.60″E / 8.4698611°N 81.2029444°E |
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 "Five New Bridges in the Eastern Province -19 October 2011". Northern Provincial Council. 20 October 2011.
- ↑ 2.0 2.1 2.2 "President to commission five new bridges". Daily News (Sri Lanka). 14 October 2011 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111016181241/http://www.dailynews.lk/2011/10/14/news30.asp.
- ↑ "Trincomalee Integrated Infrastructure Project funded by French Development Agency in Sri Lanka : A15, B10 and C- Class Coastal road rehabilitation". France in Sri Lanka and the Maldives.
- ↑ "French Government boosts development in Trincomalee". Financial Times, Sri Lanka. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401091348/http://www.ft.lk/2011/04/23/french-government-boosts-development-in-trincomalee/.
- ↑ Amarajeewa, Amadoru (23 October 2011). "Now Trinco-Batti road journey sans ferries". Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/111023/News/nws_15.html.