உலக பிரெய்லி நாள்

சனவரி 4ஆம் நாளில் வரும் சிறப்புநாள்
(உலக பிரெய்லி தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலக பிரெய்லி நாள் (World Braille Day) ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று பன்னாட்டு அளவில் அனுசரிக்கப்படுகிறது. பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உடையோர் ஆகியவர்கள் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவும் தகவல் தொடர்பு சாதனமான பிரெய்லியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்நாள் கொண்டாடுகிறது.[1][2] நிகழ்விற்கான தேதி 2018 ஆம் ஆண்டு ஒரு பிரகடனத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய இலூயிசு பிரெய்லின் பிறந்த நாளையும் இது குறிக்கிறது.[3][4] முதல் உலக பிரெய்லி தினம் 2019 ஆம் ஆண்டு சனவர் மாதம் 4 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "A/RES/73/161 - E - A/RES/73/161". undocs.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  2. "World Braille Day, 4 January". www.un.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  3. "World Braille Day, 4 January". www.un.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  4. "World Braille Day celebrated at Jamia Millia Islamia". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  5. "First-ever World Braille Day underscores importance of written language for human rights". UN News (in ஆங்கிலம்). 2019-01-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  6. Rastogi, Pracarsh (2019-01-03). "World Braille Day: Education tools for the visually-impaired" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/words-are-all-they-have/article25899017.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பிரெய்லி_நாள்&oldid=3438804" இலிருந்து மீள்விக்கப்பட்டது