எட்வர்ட் மண்ச்
எட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.