எப்போது அழியும் இந்த உலகம்? (நூல்)
அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்
எப்போது அழியும் இந்த உலகம்? எனப்படுவது தமிழ் எழுத்தாளர் ராஜ்சிவா எழுதிய ஒரு அறிவியல் கட்டுரைத் தொகுப்பு நூலாகும். 2012-ல் எழுதிய இந்தப் புத்தகம் உயிர்மை இதழில் ஒரு தொடராக வெளிவந்தது.[2]
நூலாசிரியர் | ராஜ்சிவா[1] |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | துப்பறியும் கட்டுரை |
வெளியீட்டாளர் | உயிர்மை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2012 |
உள்ளடக்கம் தொகு
எப்போது அழியும் இந்த உலகம் என்ற இந்த புத்தகம் தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் கணித்த “மாயன் காலண்டரில் கூறியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உலக அழிவை ஆய்வு செய்கிறது. மாயன் இன மக்களின் அறிவுக் கூர்மையையும், அவர்கள் கணித, வானவியல் சிந்தனைகளையும் அலசுவதோடு, மாயன் இன மக்களுக்கும் தமிழர்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ என்றும் ஒப்பு நோக்குகிறது.[3]
குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-09-21.