எழுத்தாளர் மாநாடு
எழுத்தாளர் மாநாடு (Authors' conference) என்பது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப் படைப்புகளை மறு ஆய்வு செய்வதற்கும் மேம்பாடுகளுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் கூடும் ஒரு வகை மாநாடு ஆகும். இந்த மாநாடுகளினால் ஒரு எழுத்தாளர் அவர்களது படைப்பு குறித்த விமர்சனங்கள் பெற்று அதன் மூலம் அவரது பணியை மேம்படுத்திக் கொள்ள இயலும். இதன் வழியாக எதிர்காலத்துகான வழிகாட்டுதலாக பெறுவதுடன், முகவர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் வழங்குபவர்களைப் போன்றவர்களையும், இது தொடர்புடைய தொழில் வல்லுநர்களைச் சந்திப்பதன் மூலமும் எழுத்தாளர்கள் பயனடையலாம். [1]