ஏ. கே. வீராசாமி
தமிழ்த் திரைப்பட நடிகர்
ஏ. கே. வீராசாமி (இறப்பு: ஆகத்து 22, 2010) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர். தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இவர், உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். பணம் படைத்தவன், முதல் மரியாதை, திருமலை தென்குமரி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் இவர் நடித்திருக்கிறார்.தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவி வகித்தார் வீராசாமி.[1]
ஏ கே வீராசாமி | |
---|---|
பிறப்பு | வீராசாமி ஆலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் |
இறப்பு | 22 ஆகத்து 2010 சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1959-2004 |
வாழ்க்கைத் துணை | ராஜலட்சுமி |
பிள்ளைகள் | சத்தியலிங்கம் (மகன்) பாலா (மகன்) ஜெயதேவ் (மகன்) செந்தில்குமார் (மகன்) ஜானகி(மகள்) |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுவீராசாமி தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் கருப்பையா தேவர், மருதாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இத்தம்பதிகளுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் ஆவர்.[2]
மறைவு
தொகுஏ. கே. வீராசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனது 84வது அகவையில் காலமானார். இவரது மனைவி ராஜலட்சுமி 2009 ஆம் ஆண்டில் இறந்தார். இவருக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி' புகழ் நடிகர் வீராசாமி மரணம்", Filmbeat, 2010-08-23, retrieved 2024-08-02
- ↑ Dinamalar (2010-08-23). "பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி மரணம் | Actor A K Veerasamy passed away". தினமலர் - சினிமா. Retrieved 2020-01-21.
- ↑ Sudha (2010-08-23). "'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி' புகழ் நடிகர் வீராசாமி மரணம்". tamil.filmibeat.com. Retrieved 2022-01-16.