கடத்தூர் (தருமபுரி)

கடத்தூர் (ஆங்கிலம்:Kadathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கடத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை 9,814 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம் தொகு

பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ள கடத்தூர் பேரூராட்சிக்கு மேற்கில் தருமபுரி 22 கிமீ; கிழக்கில் அரூர் 35 கிமீ; வடக்கில் கம்பைநல்லூர் 18 கிமீ; தெற்கில் பொம்மிடி 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 12 கிமீ தொலைவில் உள்ள பொம்மிடியில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 40 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,811 வீடுகளும், 11,382 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கடத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kadathur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடத்தூர்_(தருமபுரி)&oldid=3603782" இலிருந்து மீள்விக்கப்பட்டது