கடிய நன்னீயார்
யாப்பிலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர் கடிய நன்னீயார். இவர் கடியநன்னியார் எனவும் குறிப்பிடப்படுகிறார். [1] இவரது இலக்கணப் பாடல்கள் 3 யாப்பருங்கல விருத்தியில் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன. [2]
1 தொகு
இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை
ஒருதலைக் காம மாகக் கூறிய
இல்லக்கண மரபின் இயல்புற நாட்டி
அதர்ப்பபட மொழிந்தனர் புலவர் அதுவே
பெறுதி வெண்பா உரியதாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரியம்மே
2 தொகு
வெண்பா ஆசிரியத்தாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரியம்மே
3 தொகு
கைக்கிளை மருட்பா ஆகி வருகால்
ஆசிரியம் வருவதாயின் மேவா
முச்சீர் எருத்திற்று ஆகி முடிவு அடி
எச்சீரானும் ஏகாரம் இறுமே
4 தொகு
கைக்கிளை ஆசிரியம் வருவதாயின்
முச்சீர் எருத்து இன்றாகி முடிவடி
எச்சீரானும் ஏகாரத்து இறுமே [3]