கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.[2] 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி”[3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கண்மணி குணசேகரன்
பிறப்புபாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், தமிழ் நாடு, இந்தியா
தொழில்நாவலாசிரியர்
தேசியம்இந்தியா இந்தியர்
வகைகள்தமிழ் புதினம், சிறுகதைகள், கவிதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அஞ்சலை (புதினம்)[1]

படைப்புகள் தொகு

  • அஞ்சலை
  • நெடுஞ்சாலை
  • கோரை
  • வந்தாரங்குடி
  • பூரணி பொற்கலை
  • ஆதண்டார் கோயில் குதிரை
  • தலைமுறைக் கோபம்
  • கிக்குலிஞ்சான்
  • மூன்றாம் நாள் பெண்
  • சமாதானக் கறி
  • உயிர்த்தண்ணீர்
  • நடுநாட்டுச் சொல்லகராதி
  • வெள்ளெருக்கு
  • காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை
  • வாடாமல்லொ
  • சிற்றகலில் தொற்றிய தீத்துளி
  • காட்டின் பாடல்
  • மிளிர் கொன்றை
  • காலடியில் குவியும் நிழல்வேளை
  • உத்திமாக்குளம்

மேற்கோள்கள் தொகு

  1. http://kanmanigunasekaran.blogspot.ae/
  2. "வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  3. Correspondent, Vikatan. "அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_குணசேகரன்&oldid=3479849" இலிருந்து மீள்விக்கப்பட்டது