கன்னித் தீவுகள்

கன்னித் தீவுகள் (Virgin Islands) கரிபியக் கடலில் காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இத்தீவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பிரித்தானியாவாலும் அமெரிக்காவாலும் ஆட்சி செய்யப்படுகின்றன. வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493 ஆம் ஆண்டு அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes (புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுருக்கப்பட்டது. இத்தீவுகளில் வசித்து வந்த அரவாக், கரிப், செர்மிக் இந்தியர்கள் ஐரோப்பிய அடிமைக் காலத்தின் போது ஏற்பட்ட நோய்கள் காரணமாகவோ அல்லது இன அழிப்புகளிந் காரணமாகவோ அழிந்துப் போயினர். பின்னர் இத்தீவுகளிக்ல் கரும்பு பெருந்தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்துக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களால் குடியேற்றப்பட்டது. தற்போது கரும்புத் தோட்டங்கள் இல்லையாயினும் வேலைக்காக கொண்டுவரப்பட்ட வேலையாட்களில் பரம்பரையினர் இங்கு வசித்து வருகின்றனர்.[1][2]

பிரித்தானிய கன்னித் தீவுகள்
அமெரிக்க கன்னித் தீவுகள்
கன்னித்தீவுகளின் வரைப்படம்

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lazell, James (2005) (in en). Island: Fact and Theory in Nature. University of California Press. பக். 382. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520931596. https://books.google.com/books?id=1aaOGjO63UgC&pg=PA382. 
  2. Pereña, Luciano (1992). Genocidio en América. Madrid: Editorial MAPFRE. பக். 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-7100-453-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னித்_தீவுகள்&oldid=3889931" இலிருந்து மீள்விக்கப்பட்டது