கராகீனன் என்பது கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வித மாவுப்பொருளாகும்.

இதன் பயன்கள் பலவாகும். குறிப்பாக சிலவகை உணவுபொருட்கள் தயாரிப்பதிலும் வேதியியல் துறையிலும் மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பதிலும் ஐசுகிரீம், பற்பசை தயாரிப்பிலும் பயன்படுகின்றது. எல்லா வித தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் இருப்பதால் விவசாயிகள் இதனை இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா தேவைகளை ஈடுசெய்ய இதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றது. தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடற்பாசி பயிரிடஅரசு ஊக்கப்படுத்துகிறது[1].

மேற்கோள்கள் தொகு

  1. "கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டம், நாளிதழ்: தினகரன், நாள்: செப்டம்பர் 22, 2016". Archived from the original on 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராகீனன்&oldid=3725132" இலிருந்து மீள்விக்கப்பட்டது