கருமாண்டி செல்லிப்பாளையம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.
(கருமாண்டி செல்லிபாளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருமாண்டி செல்லிப்பாளையம் (ஆங்கிலம்:(Karumandi Chellipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கருமாண்டி செல்லிப்பாளையம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,868 (2011)

952/km2 (2,466/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 25.06 சதுர கிலோமீட்டர்கள் (9.68 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/karumandichellipalayam

அமைவிடம் தொகு

கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிக்குக் கிழக்கில் ஈரோடு 19 கி.மீ.; மேற்கில் விஜயமங்கலம் 15 கி.மீ.; வடக்கில் காஞ்சிக்கோயில் 10 கி.மீ.; தெற்கில் சென்னிமலை 13 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

25.06 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 6,817 வீடுகள், 23,868 மக்கள்தொகை கொண்டதைக் குறிக்கிறது.[4]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கருமாண்டி-செல்லிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Karumandi Chellipalayam Population Census 2011