கர்ணசுவர்ணா

இந்தியாவில் வங்காளத்தின் வரலாற்றுக் குடியேற்றம்

கர்ணசுபர்ணா (Karnasubarna) அல்லது கர்ணசுவர்ணா (பொருள்: கர்ணனால் அழகாக நிர்மாணிக்கப்பட்டது) என்பது 7 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பண்டைய வங்காளத்தின் கௌடப் பேரரசின் முதல் மன்னனான சசாங்கன் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்தது. சசாங்கனின் மரணத்திற்குப் பிறகு, காமரூப மன்னனான பாஸ்கரவர்மனிடம் ஒரு குறுகிய காலம் இது இருந்திருக்கலாம். இது அவனது நிதான்பூர் செப்புத் தகடு மூலம் தெளிவாகிறது. ஜெயநாகனின் வாப்ப கோசாவத செப்புத் தகட்டின்படி 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இது ஜெயநாகனின் தலைநகராக இருந்தது. கர்ணசுவர்ணாவின் இடிபாடுகள் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் தற்போதைய முர்சிதாபாத் மாவட்டத்தில் கன்சோனாவில் அமைந்துள்ளன. [1] [2] இது முர்சிதாபாத் மாவட்டத்தின் தலைமையகமான பெர்காம்பூருக்கு தென்மேற்கே 9.6 கிலோமீட்டர் (6.0 மைல்) தொலைவில் உள்ளது. [3]

கர்ணசுவர்ணா
இரக்தாமிர்திகா விகாரையின் எச்சங்கள், சுமார் பொ.ச.600.
கர்ணசுவர்ணா is located in மேற்கு வங்காளம்
கர்ணசுவர்ணா
Shown within India West Bengal
இருப்பிடம்மேற்கு வங்காளம், இந்தியா
ஆயத்தொலைகள்24°01′49″N 88°11′27″E / 24.03028°N 88.19083°E / 24.03028; 88.19083
வகைகுடியேற்றங்கள்
வரலாறு
கட்டப்பட்டதுபொ.ச. 7ஆம் நூற்றாண்டு
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1929–30, 1962
அகழாய்வாளர்கே. என். தீக்சித், எஸ். ஆர். தாசு
உரிமையாளர்இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கொல்கத்தா பல்கலைக்கழகம்

பாண்டவர்களின் தாயான குந்திக்கு முதன்முதலில் பிறந்த மகனான கர்ணனுக்கு கௌரவ இளவரசன் துரியோதனன் வழங்கிய அங்க இராச்சியத்தின் தலைநகராக இது இருந்ததாக ஒரு புராணக்கதை இருக்கிறது.

போக்குவரத்து தொகு

கிழக்கு ரயில்வேயின் பர்கர்வா-அசிம்கஞ்ச்-கட்வா சுழற்சியில் கர்ணசுபர்ணா தொடருந்து நிலையம் (முன்பு சிரூட்டி என்று அழைக்கப்பட்டது) அமைந்துள்ளது. சில பயணிகள் தொடருந்துகளும், விரைவு தொடருந்துகளும் இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன. இங்கிருந்து மாவட்டத் தலைமையகம் பகாரம்பூருக்கு பேருந்துச் சேவைகள் உள்ளன.

இராசபரிதங்கத்தில் அகழ்வாராய்ச்சி தொகு

பிரபல சீனப் பயணி சுவான்சாங் தனது பயணக் குறிப்புகளில் கர்ணசுவர்ணாவுக்கு அருகிலுள்ள வச்சிரயான பௌத்தர்களின் கற்றல் மையமான உலோ-தோ-மோ-சி (இரக்தாமிரித்திகா) மகாவிகாரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.[4][5] இது இராசபரிதங்கம் என்ற இடத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இராசபரிதங்கத்தின் தொல்லியல் தளம் பாகீரதி ஆற்றங்கரையிலுள்ள கர்ணசுவர்ணா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.4 கி.மீ தூரத்தில் உள்ளது. தொல்லியலாளர் எஸ். ஆர். தாசு என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் 1962ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு குழு இந்த தளத்தை முதன்முதலில் தோண்டியது. [6]

புகைப்படங்கள் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ray, Nihar Ranjan, Bangalir Itihas Adi Parba, (in Bengali), 1980 edition, pp. 160–161, Paschim Banga Niraksharata Durikaran Samiti
  2. Sengupta, Nitish, History of the Bengali-speaking People, p.25, UBS Publishers’ Distributors Pvt. Ltd.
  3. Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, first published 1971, reprint 2005, pp. 5–6, Tulshi Prakashani, Kolkata, ISBN 81-89118-01-3.
  4. Ghosh, Suchandra (2012). "Gauda, Janapada". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Gauda,_Janapada. 
  5. Bandopadhyay, Rakhaldas, Bangalar Itihas, (வங்காள மொழியில்), first published 1928, revised edition 1971, vol I, p 101, Nababharat Publishers, 72 Mahatma Gandhi Road, Kolkata.
  6. Ghosh, A. (ed.) (1965). "Indian Archaeology 1962–63 – A Review" (PDF). Archaeological Survey of India. p. 46. பார்க்கப்பட்ட நாள் 2009-10-26. {{cite web}}: |first= has generic name (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணசுவர்ணா&oldid=3176855" இலிருந்து மீள்விக்கப்பட்டது