காசிகுண்ட் தொடருந்து நிலையம்

காசிகுண்ட் தொடருந்து நிலையம் (Qazigund railway station) என்பது இந்திய இரயில்வேயின் வடக்கு தொடருந்து மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் காசிகுண்ட் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது. இது காசிகுண்ட் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகும். இப்பகுதி பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது

காசிகுண்ட் தொடருந்து நிலையம்
Qazigund railway station
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம்
இந்தியாவின் ஜம்மு காசுமீரில், காசிகுண்டில் உள்ள காசிகுண்ட் தொடருந்து நிலையத்தின் நடைமேடை
பொது தகவல்கள்
அமைவிடம்காசிகுண்ட், சம்மு காசுமீர், இந்தியா
ஆள்கூறுகள்33°35′19″N 75°09′29″E / 33.5886°N 75.1580°E / 33.5886; 75.1580
ஏற்றம்1722.165 மீ
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்வடக்கு இரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான தரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுQG[1]
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது2008

அமைவிடம் தொகு

காசிகுண்ட் தொடருந்து நிலையம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள காசிகுண்ட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு தாவி மற்றும் மற்ற இந்தியத் தொடருந்து வலையமைப்புடன் இணைக்கும் நோக்கில், ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலைய தொடக்கவிழா நாளில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும், பனிகால் மேல்நிலைப் பள்ளியின் 100 மாணவர்களுடன், பெரும்பாலும் பெண்களுடன் காசிகுண்டிற்கு 12 நிமிட பயணத்தை மேற்கொண்டனர். மேலும் 17.8 கிமீ பயணத்தின் ஒரு பகுதியாக பனிகாலுக்குத் திரும்பிச் சென்றனர். இப்பயணத்தின் போது ஜம்மு ஆளுஞர் என். என். வோஹ்ரா, முதல்வர் உமர் அப்துல்லா, தொடருந்து துறை அமைச்சர் மல்லிகார்ச்சுன் கார்கே மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் இருந்தனர்.இத்தடம் ஆசியாவிலேயே இரண்டாவது மிக நீளமானபீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை வழியாகச் செல்கிறது.[2]

குறைக்கப்பட்ட நிலை தொகு

நிலையத்தின் குறைக்கப்பட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 1671 மீ உயரத்தில் உள்ளது.

வடிவமைப்பு தொகு

இந்த பெரும் திட்டத்தில் உள்ள மற்ற எல்லா நிலையங்களையும் போலவே, இந்த நிலையமும் காசுமீரி மரக் கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது. இந்நிலையம் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு அரச நீதிமன்றத்தின் நோக்கத்துடன் கூடிய சூழலைக் கொண்டுள்ளது. நிலையப் பெயரானது உருது, ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. 

மேலும் பார்க்கவும் தொகு

  • அனந்த்நாக் ரயில் நிலையம்
  • ஸ்ரீநகர் ரயில் நிலையம்

மேற்கோள்கள் தொகு

  1. "74627/Banihal Baramula DEMU". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  2. Balchand, K. (27 June 2013). "Banihal-Qazigund rail link opened". The Hindu. Archived from the original on 5 December 2013.