தட்சணாமருதமடு மாணவர் படுகொலைகள், ஜனவரி 2008

மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். இந்நிகழ்வு செவ்வாய், ஜனவரி 29 2008 அன்று மணி 2.25 பி.ப இடம்பெற்றது.[1] இந்தக் தாக்குதலை இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணி நடத்தியதாக புலிகள் குற்றம் சாட்டினர். இராணுவம் இந்த நிகழ்வுக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை என்று தெரிவித்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24462
  2. Children die in S Lanka bus blast - பிபிசி

வெளி இணைப்புகள் தொகு