குப்தப் பேரரசு
குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம்: பொ.ஊ. 320 – 551) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார். பொ.ஊ. 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது.[6] இப்பேரரசின் பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன.
குப்தப் பேரரசு | |
---|---|
பொ. ஊ. ஆரம்ப 4ஆம் நூற்றாண்டு–பொ. ஊ. ஆரம்ப 6ஆம் நூற்றாண்டு | |
யோசோப்பு எ. சுவர்துசுபெர்க்கு என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, அண். பொ. ஊ. 420இல் சம கால அரசியலைப்புகளுடன் குப்தப் பேரரசின் வரைபடம்[1] | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | பாடலிபுத்திரம் அயோத்தி[2][3] |
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் (இலக்கியம் மற்றும் கல்வி மொழி); பிராகிருதம் (பேச்சு வழக்கு மொழி) |
சமயம் | |
மக்கள் | இந்தியர் |
அரசாங்கம் | முடியரசு |
பேரரசர் | |
• 240–280 | ஸ்ரீகுப்தர் |
• 280 – 319 | கடோற்கஜன் |
• 320 - 335 | முதலாம் சந்திரகுப்தர் |
• 335 - 375 | சமுத்திரகுப்தர் |
• 375 - 415 | இரண்டாம் சந்திரகுப்தர் |
• 415 – 455 | முதலாம் குமாரகுப்தர் |
• 455 – 467 | ஸ்கந்தகுப்தர் |
• 467 – 473 | புருகுப்தர் |
• 476 – 495 | புத்தகுப்தர் |
• 540 – 550 | விஷ்ணுகுப்தர் |
• 550–? | பானுகுப்தர் |
வரலாற்று சகாப்தம் | பண்டைக் கால இந்தியா |
• தொடக்கம் | பொ. ஊ. ஆரம்ப 4ஆம் நூற்றாண்டு |
• முடிவு | பொ. ஊ. ஆரம்ப 6ஆம் நூற்றாண்டு |
பரப்பு | |
400 மதிப்பீடு.[4] (உச்சபட்ச பரப்பளவின் அதிகபட்ச மதிப்பீடு) | 3,500,000 km2 (1,400,000 sq mi) |
440 மதிப்பீடு.[5] (உச்சபட்ச பரப்பளவின் குறைந்த பட்ச மதிப்பீடு) | 2,500,000 km2 (970,000 sq mi) |
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() |

அறிவியல், கணிதம், வானியல், சமயம், இந்திய தத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதால், குப்தப் பேரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு.[7] இந்த பொற்காலம் என்ற கருத்து தற்போதைய அறிஞர்களால் மறுக்கப்படுகிறது [8][9][10][11] குப்தர்களின் ஆட்சியில் ஏற்பட்டிருந்த அமைதியும், வளமும் அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவித்தன. பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள்.[12][13]
குப்தப் பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆவார்கள்.
மேலும் குப்தர்கள் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், தருக்கம், கணிதம், வானவியல், இந்தியத் தத்துவம், சோதிடம், இந்து தொன்மவியல், இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற சமயங்கள் செழித்ததுடன், இந்துப் பண்பாடு, சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தது.
நான்காம் நூற்றாண்டின் சமசுகிருத மொழியின் மகாகவி காளிதாசன் தமது இரகுவம்சம் எனும் காவியத்தில், குப்த ஆட்சியாளர்கள், நடு ஆசியாவின் ஆமூ தாரியா ஆறு பாயும் இடங்களில் வாழும் சகர்கள் ஹூணர்கள், காம்போஜர்கள், கிராதர்கள் மற்றும் கிண்ணர நாடுகளையும் சேர்த்து, இந்தியத் துணைக்கண்டத்தின் 21 நாடுகளை வென்றதாக குறிப்பிட்டுள்ளார்.[14]
இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் பண்பாட்டு, நாகரீகம், கலைகள், இலக்கியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தது. சமஸ்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றது.[15]
குப்தர்களின் ஆட்சியில் கவிஞர் காளிதாசன், வானிலை மற்றும் கணித அறிஞர்களான ஆரியபட்டர் மற்றும் வராகமிகிரர், பஞ்சதந்திர நூலை எழுதிய விஷ்ணு குப்தர், காம சூத்திரம் நூலை எழுதிய வாத்சாயனர், ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர் போன்ற பல்கலை அறிஞர்கள் வாழ்ந்தனர்.[16]
குப்தர்கள் ஆட்சிக் காலத்தில்அறிவியல் மற்றும் அரசியல் நிர்வாகம் செழித்தோங்கி உச்சகட்டத்தை அடைந்தது. குப்தர்கள் தென்கிழக்கு ஆசியா நாடுகளுடனும் குறிப்பாக இலங்கை மற்றும் பர்மா போன்ற அண்டை நாடுகளுடன் பலமான வணிக உறவுகளைக் கொண்டிருந்தனர்.[17]
குப்தப் பேரரசர் விஷ்ணு குப்தர் காலத்தில், குப்தப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் சிறிது சிறிதாக, நடு ஆசியாவின் ஹெப்தலைட்டு ஹூணர்களின் தொடர் ஆக்கிரமிப்புகளாலும், அண்டை நாட்டவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, இறுதியில் பொ.ஊ. 550-இல் குப்தப் பேரரசு வீழ்ச்சியுற்றது.[18][19]
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் புதிய சிறிய, பெரிய நாடுகள் உருவானது. விஷ்ணு குப்தருக்குப் பின் வந்த பிற்கால குப்த அரசர்கள் மகதத்தின் பகுதிjளை மட்டும் ஆண்டனர்.
குப்தர்களின் தோற்றம் தொகு
பல வரலாற்று அறிஞர்களின் கூற்றுப் படி, குப்த வம்சத்தவர்கள் வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.[20][21] இருப்பினும் தங்களது ஆட்சிப் பரப்பில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளையும் ஆதரித்தனர்.
குப்தர்களின் தாயகம் தொகு
வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் என தற்போது அழைக்கப்படும் பிரயாகை பகுதியே குப்தர்களின் தாயகம் என ஜெய்ஸ்வால் போன்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். பார்சிவா ஆட்சிப் பகுதியான பிரயாகை பகுதியே குப்த வம்சத்தினர் தோற்றம் எனக் கருதுகிறார்கள்.
சில வரலாற்று ஆய்வாளர்கள் வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகம் என கருதுகிறார்கள்.
ஸ்ரீகுப்தர் மற்றும் கடோற்கஜன் தொகு
சிற்றரசராக இருந்த ஸ்ரீகுப்தர் தற்கால பிகார் மாநிலமான மகதத்தில் பொ.ஊ. 240-இல் குப்தப் பேரரசை நிறுவி, பொ.ஊ. 280 முடிய ஆண்டார்.[22] ஸ்ரீகுப்தர் லிச்சாவி நாட்டு இளவரசியை மணந்து மகதத்தை சீதனமாகப் பெற்று மகத நாட்டை விரிவு படுத்தினார். ஸ்ரீகுப்தரின் மகன் கடோற்கஜன் குப்த நாட்டை பொ.ஊ. 280 முதல் 319 வரை ஆண்டார்.
முதலாம் சந்திரகுப்தர் (319 – 335) தொகு
பின்னர் ஆட்சிக்கு வந்த பேரரசர் முதலாம் சந்திரகுப்தர் (319 – 335) குப்த பேரரசை தற்கால உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளப் பகுதிகளில் விரிவாக்கினார்.[23][24] முதலாம் சந்திரகுப்தர் மகதத்தின் லிச்சாவி நாட்டு இளவரசி குமாரதேவியை மணந்தவர். பாடலிபுத்திரம் நகரை தலைநகராகக் கொண்டு குப்தப் பேரரசை ஆண்டவர்.
சமுத்திரகுப்தர் தொகு
சமுத்திரகுப்தர், பொ.ஊ. 335 முதல் 375 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்த பேரரசர். இவர் இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர் மத்திய இந்தியாவின் மால்வா, பத்மாவதி நாகர்கள், யௌதேயர்களின் யௌதேய நாடு, ஆபீர நாடு, அருச்சுனயான பகுதிகளையும், வடமேற்கு இந்தியாவின் காஷ்மீர், ஆப்கானித்தான் போன்ற பகுதிகளையும் வென்று குப்தப் பேரரசை விரிவாக்கினார். 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சமுத்திரகுப்தர், 380-இல் இறப்பதற்குள், வடக்கே இமயமலை முதல் தெற்கே நர்மதை ஆறு வரையிலும், மேற்கே யமுனை ஆறு முதல் கிழக்கே பிரம்மபுத்திரா ஆறு வரையில் இருந்த இருபது நாடுகளை குப்தப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். எனவே இவரை இந்தியாவின் நெப்போலியன் என வரலாற்று ஆய்வாளர் வின்செண்ட் ஆர்தர் ஸ்மித் அழைப்பர்.[25]
சமுத்திரகுப்தர் பெரும் போராளியாக இருப்பினும், அனைத்து சமயங்களுக்கும், கலை மற்றும் இலக்கியங்களுக்கும் ஆதரவு நல்கினார். இவரது அரசவையில் கவிஞர் ஹரிசேனர் மற்றும் வசுபந்து, அசங்கர் போன்ற பௌத்த அறிஞர்கள் இருந்தனர். விஷ்ணு பக்தரான சமுத்திரகுப்தர், இலங்கை மன்னர் சிறிமேகவண்ணனுக்கு புத்தகயாவில் விகாரை எழுப்ப அனுமதித்தார்.
இரண்டாம் சந்திரகுப்தர் தொகு
இராமகுப்தருக்குப் பின்னர் அரியணை ஏறிய இரண்டாம் சந்திரகுப்தரை, சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் என்றும் அழைப்பர். சமுத்திரகுப்தரின் மகனாக இவர் வடஇந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர். இவரின் ஆட்சி காலமான பொ.ஊ. 380 முதல் 415 முடிய உள்ள காலத்தில், கலை, இலக்கியம், கட்டிடக் கலை, சிற்பக் கலை செழிப்பின் உச்சத்தைத் தொட்டது. இந்து சமயம் மீண்டும் மிகப் பொழிவுடன் செழித்தோங்கியது. எனவே இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[26]உஜ்ஜைன் நகரத்தை குப்த பேரரசின் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர். இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கில் வங்கத்தை வென்றதுடன், மேற்கில் சகர்கள் மற்றும் மேற்கு சத்ரபதி மன்னர் மூன்றாம் ருத்திரசிம்மனை வென்று சௌராட்டிர தீபகற்பத்தை குப்தப் பேரரசுடன் இணைத்தார்.
சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்தினங்கள் என்று சிறப்பாக அழைக்கப்பட்ட காளிதாசன் உள்ளிட்ட ஒன்பது அறிஞர்கள் குழுவினர் இருந்தனர்.
வெளிநாட்டு இனக்குழுக்களுக்கு எதிரான இரண்டாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகள் தொகு
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சமசுகிருத இலக்கிய அறிஞர் காளிதாசன் தனது இரகுவம்சம் எனும் காவியத்தில், சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் எனப் பெயர் பெற்ற இரண்டாம் சந்திரகுப்தர், பரத கண்டத்தின் மேற்கிலும், கிழக்கிலும் மற்றும் வெளியிலும் இருந்த 21 இராச்சியங்களையும், இனக்குழுக்களையும் வென்றதாக குறித்துள்ளார். மேலும் பரத கண்டத்தின் வெளிபுறத்தின் மேற்கிலும், வடமேற்கிலும் இருந்த ஹூணர்களையும், காம்போஜர்களையும், இமயமலை வாழ் கிராதர்களையும், கிண்ணரர்களையும் வென்றதாக குறித்துள்ளார்.[14]
சேமேந்திரா எனும் காஷ்மீர பண்டிதர் எழுதிய பிரகத்கதா மஞ்சரி எனும் நூலில் இரண்டாம் சந்திரகுப்தர், சகர்கள், மிலேச்சர்கள், காம்போஜர்கள், கிரேக்கர்கள், ஹூணர்கள், பரசிகர்கள், துஷாரர்கள் போன்ற பரத கண்டத்தின் மேற்கிலும் வடமேற்கிலும் இருந்த இனக்குழுவினரை வென்றதாக குறித்துள்ளார்.[27][28][29]
பாஹியான் தொகு
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில், சீன பௌத்த அறிஞரான பாகியான், குப்தப் பேரரசிற்கு வருகை புரிந்து, பொ.ஊ. 405 முதல் 411 முடிய கன்னோசி, மதுரா, கபிலவஸ்து, குசிநகர், வைசாலி, பாடலிபுத்திரம், ராஜகிரகம், சாரநாத், சாஞ்சி போன்ற பௌத்த புனித தலங்களுக்கு வருகை புரிந்ததுடன், அன்றைய காலகட்ட குப்தப் பேரரசின் ஆட்சி நிர்வாகம், நீதிமுறை, சமுதாய நிலை, சமயங்கள் உள்ளிட்டவைகள் சிறப்பாக இருந்ததாக தனது பயணக்குறிப்புகளில் குறித்துள்ளார்.
முதலாம் குமாரகுப்தன் தொகு
இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் அவர்தம் மகன் முதலாம் குமாரகுப்தர் மகேந்திர ஆதித்தியன் எனும் பட்டப் பெயருடன் குப்தப் பேரரசின் மன்னரானார்.[30] முதலாம் குமாரகுப்தர் பொ.ஊ. 415 முதல் 455 முடிய அரசாண்டார். முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகம், யுனேஸ்கோ அமைப்பால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்ளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[31][32][33] தில்லியிலுள்ள கல்வெட்டுக் குறிப்புகளுடன் கூடிய தில்லி இரும்புத் தூண் குமாரகுப்தன் காலத்தில் நிறுவப்பட்டது.
ஸ்கந்தகுப்தர் தொகு
முதலாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஸ்கந்தகுப்தர் குப்தப் பேரரசின் ஆட்சியாளர்களில் எட்டாவதும் மற்றும் இறுதி பேரரசராக கருதப்படுகிறார்.[34]புஷ்யமித்திர சுங்கனை போரில் வென்ற ஸ்கந்தகுப்தர், பொ.ஊ. 455-இல் நடு ஆசியாவிலிருந்து, குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் தாக்குதல்களை நடத்திய வெள்ளை ஹூணர்கள் எனப்படும் ஹெப்பதலைட்டுகளை போரில் விரட்டி அடித்த போதிலும், பொ.ஊ. 455 தொடங்கி குப்தப் பேரரசின் நிதி மற்றும் பொருளாதாரம் வற்றியது. பொ.ஊ. 467-இல் ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின் அவரது பங்காளி முறை சகோதரன் புருகுப்தர் 467-இல் குப்தப் பேரரசின் மன்னரானர்.[35]
குப்தப் பேரரசின் வீழ்ச்சி தொகு
ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின்னர் குப்தப் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது.[36] ஸ்கந்தகுப்தருக்குப் பின்னர் பட்டமேறிய குப்த பேரரசர்களான புருகுப்தர் (467–473), இரண்டாம் குமாரகுப்தர் (473–476), புத்தகுப்தர் (476–495), நரசிம்மகுப்தர் (495—?), மூன்றாம் குமாரகுப்தர் (530—540), விஷ்ணுகுப்தர் (540—550), மற்றும் குறைவாக அறியப்பட்ட வைணவகுப்தர் மற்றும் பானுகுப்தர் காலங்களில் குப்தப் பேரரசு தொடர்ந்து வீழ்ச்சி காணத் துவங்கியது.
பொ.ஊ. 480-இல் குப்தப் பேரரசின் வடமேற்கு பகுதிகளை ஹெப்தலைட்டுகளும், பொ.ஊ. 500-இல் ஹூணர்களும் கைப்பற்றினர். பொ.ஊ. 510-இல் ஹெப்தலைட்டுகளின் மன்னரான தோரமணனை, பானுகுப்தர் போரில் வென்றார்.[37][38]
பொ.ஊ. 528-இல் மால்வா மன்னர் யசோதர்மனுடன் சேர்ந்து குப்தப் பேரரசர் நரசிம்மகுப்தர் ஹூணர்களின் மன்னர் மிகிரகுலனை வெற்றி கொண்டனர்.[39] பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டு காலத்திய குப்த பேரரசர்களின் பெயர்கள் தெளிவாக அறியப்படவில்லை எனினும், விஷ்ணுகுப்தர் குப்தப் பேரரசை 540 முதல் 550 முடிய ஆண்டார்.
குப்தப் பேரரசின் தெற்கில் இருந்த வாகாடகப் பேரரசு மற்றும் வடமேற்கிலிருந்து ஹூணர்களின் தொடர் தாக்குதல்கள் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.[40]
குப்தர்களின் இராணுவம் தொகு
இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில், குப்தப் பேரரசின் இராணுவத்தில் ஐந்து இலட்சம் தரைப்படையினரும், ஐம்பதாயிரம் குதிரைப் படையினரும், இருபதாயிரம் தேர்ப்படையினரும், பத்தாயிரம் யாணைப்படைகளும், 1200 போர்க் கப்பல்களும் இருந்தன.
குப்தப் பேரரசின் நிர்வாகம் தொகு
குப்தர்கள் கால வெட்டெழுத்தியல் ஆய்வுகளின் படி, குப்தப் பேரரசை, இராச்சியம், இராஷ்டிரம், தேசம், மண்டலம், பிரிதிவி மற்றும் அவனி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. குப்தப் பேரரசு, புக்தி, பிரதேசம் மற்றும் போகா போன்ற பெயர்களில் 26 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மாகாணங்கள் விஷயா என்றும் அதன் நிர்வாகியை விஷயாதிபதி என்றும் அழைத்தனர். அதிகரணம் எனும் ஆலோசனைக் குழுவின் உதவியுடன் விஷயாதிபதி செயல்பட்டார். அதிகரணம் எனும் ஆலோசனைக் குழுவில் நகரத் தலைவர், சார்தவாகன், பிரதமகுளிகன் மற்றும் பிரதம காயஸ்தன் இருந்தனர். விஷயாவின் ஒரு பகுதியாக வீதி விளங்கியது.[41] குப்தர்கள் உரோமானியர்களுடன் வணிக உறவு கொண்டிருந்தனர்.
குப்தப் பேரரசின் மரபுரிமைப் பேறுகள் தொகு
குப்தப் பேரரசின் காலத்தில் வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடருமான வராகமிகிரர் மற்றும் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் பிரம்மபுத்தர். வானியலாளர், கணித மேதையான ஆரியபட்டர் போன்ற அறிவியல் அறிஞர்களும், காவிய இலக்கியங்களைப் படைத்த சமசுகிருத மொழி மகாகவி காளிதாசன் மற்றும் ஆயுர்வேத மருத்துவ அறிஞரும், அறுவை சிகிச்சை மருத்துவருமான சுஸ்ருதர் குப்தப் பேரரசில் வாழ்ந்தவர்கள். சதுரங்க விளையாட்டு குப்தர்கள் காலத்தில் துவங்கியது.[42] இந்திய எண் முறை குப்தர்கள் காலத்தில் உருவாகி உலகெங்கும் பரவியது. குப்தர்கள் காலத்தில் வாத்சாயனர் எழுதிய காம சூத்திரம் எனும் ஆண்-பெண் உடலறவு பற்றிய நூல் பெரும் புகழ் பெற்றதாகும்.
பூமி தனது சுழன்று கொண்டே சூரியனை சுற்றுகிறது என்றும், பூமியும் மற்ற கோள்களும் சூரியனிடமிருந்தே ஒளியை பெறுகிறது என்ற உண்மையை உலகிற்கு முதலில் உணர்த்தியவர் குப்தர் காலத்து ஆரியபட்டர் என்ற கணித மேதையும், வானியல் அறிஞரும் ஆவார்.[43]
குப்தப் பேரரசின் ஆட்சியாளர்கள் தொகு
முற்கால குப்தர்கள் தொகு
- ஸ்ரீகுப்தர் (240 – 280)
- கடோற்கஜன் (280 – 319)
குப்தப் பேரரசர்கள் தொகு
- முதலாம் சந்திரகுப்தர் (320 – 335)
- சமுத்திரகுப்தர் (335 – 380)
- இராமகுப்தர் (380)
- இரண்டாம் சந்திரகுப்தர் (380 – 413/415)
- முதலாம் குமாரகுப்தன் (415 – 455)
- ஸ்கந்தகுப்தர் (455 - 467)
பிற்கால குப்தர்கள் தொகு
- புருகுப்தர் (467 – 473)
- இரண்டாம் குமாரகுப்தர் (473 - 476)
- புத்தகுப்தர் (476 – 495)
- நரசிம்மகுப்தர் (495 – ?)
- மூன்றாம் குமாரகுப்தர் (530 – 540)
- விஷ்ணுகுப்தர் (540 – 550)
- வைன்யகுப்தர் (550 – ?)
- பானுகுப்தர் (550 - ?)
கலை மற்றும் கட்டிடக் கலை தொகு
வட இந்தியாவில் குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் கலை, அறிவியல், பொருளாதாரம், இந்து, பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் நன்கு வளர்ச்சியுற்றதால், குப்தர்களின் ஆட்சிக் காலத்தை பொற்காலம் என்றனர். இந்துக் கடவுளர்கள், பௌத்த சமயத்தின் கௌதம புத்தர் மற்றும் சமண சமய தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் குப்தப் பேரரசு முழுவதும் செதுக்கப்பட்டது. மதுரா மற்றும் காந்தாரம் சிற்பக்கலையின் மையங்களாக விளங்கியது. கிரேக்க சிற்பக் கலை நயத்தில் கௌதம புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டது. சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தன.
அஜந்தா, எல்லோரா குடைவரைக் கோயில்களில் இந்து, பௌத்த, சமண சமயங்களின் சிற்பங்கள், ஓவியங்கள் எழுப்பப்பட்டது.
உதயகிரி, கந்தகிரி குகைகள் மற்றும் உதயகிரி குகைகளில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பங்கள் வடிக்கப்பட்டது.[44] தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் அச்சிடப்பட்டது.
தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோகர் நகரத்தில் பஞ்சயாதன முறைப்படி கட்டப்பட்ட தசாவதாரக் கோயில் மற்றும் சமண சமயத் தீர்த்தங்கரரான சாந்திநாதரின் கோயில் சமைக்கப்பட்டது.[45]
-
தசாவதாரக் கோயில், தியோகர், 5-ஆம் நூற்றாண்டு
-
தசாவதாரக் கோயிலின் விமானம், 5-ஆம் நூற்றாண்டு
-
தியோகர் சமணக் கோயிலில் பார்சுவநாதர் மற்றும் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்
-
கௌதம புத்தரின் சிற்பம், சாரநாத், 5-6-ஆம் நூற்றாண்டு
-
பெரிய மும்மூர்த்திகள் சிற்பம், எலிபண்டா குகைகள், மகாராட்டிரம்
-
எல்லோரா குடைவரைக் கோயில்கள்
-
அஜந்தா ஓவியங்கள், குகை எண் 1
இதனையும் காண்க தொகு
குப்தர்கள் கட்டிய இந்து, சமணக் கோயில்களும் மற்றும் கோட்டைகளும்;
அடிக்குறிப்புகள் தொகு
- ↑ Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. பக். 145, map XIV.1 (j); p.25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0226742210. https://dsal.uchicago.edu/reference/schwartzberg/pager.html?object=182. பார்த்த நாள்: 12 February 2022.
- ↑ Bakker, Hans (1984), Ayodhya, Part 1: The History of Ayodhya from the seventh century BC to the middle of the 18th century, Groningen: Egbert Forsten, p. 12, ISBN 90-6980-007-1
- ↑ * Hans T. Bakker (1982). "The rise of Ayodhya as a place of pilgrimage". Indo-Iranian Journal 24 (2): 105. doi:10.1163/000000082790081267. "During the reign of either the emperor Kumāragupta or, more probably , that of his successor Skandagupta ( AD 455–467 ), the capital of the empire was moved from Pāțaliputra to Ayodhyā...".
- ↑ Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 223. doi:10.5195/JWSR.2006.369. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X.
- ↑ Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History 3 (3/4): 121. doi:10.2307/1170959.
- ↑ "Gupta Dynasty – MSN Encarta".. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://encarta.msn.com/encyclopedia_761571624/Gupta_Dynasty.html.
- ↑ N. Jayapalan, History of India, Vol. I, (Atlantic Publishers, 2001), 130.
- ↑ Jha, D.N. (2002). Ancient India in Historical Outline. Delhi: Manohar Publishers and Distributors. பக். 149–173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7304-285-3.
- ↑ Singh. "The Pearson Indian History Manual for the UPSC Civil Services Preliminary Examination". Pearson Education India. https://books.google.co.in/books?id=wsiXwh_tIGkC&pg=PA191&lpg=PA191&dq=dn+jha+golden+age.
- ↑ "The myth of the Gupta Empire as the ‘Golden Age’ for India". SabrangIndia. 1 March 1997. https://sabrangindia.in/article/myth-gupta-empire-golden-age-india.
- ↑ https://thewire.in/21359/how-hindutva-historiography-is-rooted-in-the-colonial-view-of-indian-history
- ↑ The Gupta Dynasty
- ↑ "Gupta Dynasty". http://encarta.msn.com/encyclopedia_761571624/gupta_dynasty.html.
- ↑ 14.0 14.1 Raghu Vamsa v 4.60–75
- ↑ Gupta dynasty (Indian dynasty). Britannica Online Encyclopedia. Retrieved on 2011-11-21.
- ↑ Gupta dynasty: empire in 4th century. Britannica Online Encyclopedia. Retrieved on 2011-11-21.
- ↑ Trade | The Story of India – Photo Gallery. PBS. Retrieved on 2011-11-21.
- ↑ Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.264–9
- ↑ Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9. https://archive.org/details/empireofsteppes00grou.
- ↑ Nehra, R.K.. Hinduism and Its Military Ethos. Lancer Publishers,2010. https://books.google.com/books?id=WaJ2tp_n1AMC&pg=PA208. பார்த்த நாள்: 2012-08-25.
- ↑ Brannigan, Michael C.. Striking a Balance: A Primer in Traditional Asian Values. Rowman & Littlefield, 2010. https://books.google.com/books?id=axvPxswqNLQC&pg=PA17. பார்த்த நாள்: 2012-08-25.
- ↑ Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.84–7
- ↑ "Chandra Gupta I - king of India". Encyclopedia Britannica. https://www.britannica.com/biography/Chandra-Gupta-I.
- ↑ "Founder of the Gupta Empire Maharaja Sri Gupta". theindianhistory.org. http://theindianhistory.org/Gupta/founder-of-the-gupta-empire-maharaja-sri-gupta.html.
- ↑ Smith, Vincent A. (1999). The Early History of India: From 600 B.C. to the Muhammadan Conquest. Atlantic. பக். 289. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7156-618-9. https://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA289.
- ↑ <http://www.britannica.com/EBchecked/topic/92493/Chandra-Gupta-II>.
- ↑ ata shrivikramadityo helya nirjitakhilah Mlechchana Kamboja. Yavanan neechan Hunan Sabarbran Tushara. Parsikaanshcha tayakatacharan vishrankhalan hatya bhrubhangamatreyanah bhuvo bharamavarayate (Brahata Katha, 10/1/285-86, Kshmendra).
- ↑ Kathasritsagara 18.1.76–78
- ↑ Cf:"In the story contained in Kathasarit-sagara, king Vikarmaditya is said to have destroyed all the barbarous tribes such as the Kambojas, Yavanas, Hunas, Tokharas and the, National Council of Teachers of English Committee on Recreational Reading – Sanskrit language.
- ↑ Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp.191–200
- ↑ http://whc.unesco.org/en/list/1502/ Archaeological Site of Nalanda Mahavihara (Nalanda University) at Nalanda, Bihar
- ↑ "3 Indian Sites Make It To UNESCO's World Heritage List". NDTV.com. https://www.ndtv.com/india-news/3-indian-sites-make-it-to-unescos-world-heritage-list-1432574.
- ↑ https://www.holidify.com/blog/world-heritage-sites-in-india/ 3 Indian Places Added To World Heritage Sites; Check-out Complete List of 35 World Heritage Sites in India
- ↑ Raychaudhuri, p. 510
- ↑ Raychaudhuri, p. 516
- ↑ Sachchidananda Bhattacharya, Gupta dynasty, A dictionary of Indian history, (George Braziller, Inc., 1967), 393.
- ↑ Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.220
- ↑ Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje p.A15
- ↑ Columbia Encyclopedia
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. New Delhi: Pearson Education. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1677-9. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC.
- ↑ Mahajan, pp. 530–1
- ↑ H. J. R. Murray (1913). A History of Chess. Benjamin Press (originally published by Oxford University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-936317-01-9. இணையக் கணினி நூலக மையம்:13472872. https://archive.org/details/AHistoryOfChessHJRMurray.
- ↑ Thomas Khoshy, Elementary Number Theory with Applications, Academic Press, 2002, p. 567. ISBN 0-12-421171-2.
- ↑ Harle, 92-97
- ↑ Harle, 113-114
மேற்கோள்கள் தொகு
- Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, ISBN 0300062176
- Majumdar, R.C. (1977). Ancient India, New Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0436-8
- Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta ISBN 1-4400-5272-7
- Tej Ram Sharma (1978). Personal and geographical names in the Gupta inscriptions. Concept Publishing Co., Delhi. https://archive.org/stream/personalgeograph00sharuoft#page/n5/mode/2up.