கூடல் தாலுகா

கூடல் தாலுகா, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் கூடல் நகரம் ஆகும்.2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 பேரூராட்சி மற்றும் 154 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இத்தாலுகாவின் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இத்தாலுகாவின் 95% மக்கள் கிராமபுறங்களில் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குடும்பங்களைக் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,55,624 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 77,159 மற்றும் பெண்கள் 78,465 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,017 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12918 - 8% ஆகும். சராசரி எழுத்தறிவு 85.83% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 10,398 மற்றும் 1,879 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.77%, இசுலாமியர்கள் 2.57%, பௌத்தர்கள் 1.95%, சமணர்கள் , கிறித்துவர்கள் 1.42% மற்றும் பிறர் 0.29% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்_தாலுகா&oldid=3361002" இலிருந்து மீள்விக்கப்பட்டது