கே. சௌரிராஜன்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
கே. சௌரிராஜன் (K. Sourirajan) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் காந்தி காமராஜ் தேசிய காங்கிரசு (காகாதேகா) கட்சி சார்பாக தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]